ராதிகாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்ளப்போகும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!
ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவிற்காக ராதிகா பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார். ராதிகாவிடம் சிக்காமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்த கோபி வீட்டின் முற்றத்தில் உள்ள புகைப்படத்தை மட்டும் கழட்டாமல் விட்டு விட்டார். அந்த புகைப்படத்தை ராதிகா பார்த்து விடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவிற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவருமே வருகிறார்கள். ராதிகாவையும் கண்டிப்பாக வருங்கால கணவரையும் அழைத்து வர வேண்டும் என பாக்கியா கூறியிருக்கிறார். எப்போதுமே பாக்கியாவினை பார்த்து விட்டால் கோபி ஓடி ஒளிந்து கொள்வார். ஆனால், இந்த முறை கண்டிப்பாக பாக்கியா டீச்சர் வீட்டுக்கு நீங்கள் வர வேண்டும். நீங்கள் வரவில்லையெனில் உங்களிடம் இனி பேச போறதே இல்லை என ராதிகா கூறுகிறார்.
Exams Daily Mobile App Download
எப்படியாவது ராதிகாவை பிறந்தநாள் விழாவிற்கு வர விடாமல் தடுக்க வேண்டும் என கோபி பிளான் போட்டு நெஞ்சு வலிப்பது போல நடிக்கிறார். பின்பு ராதிகா நீங்கள் வீட்டிலேயே ரெஸ்ட் எடுங்கள், நான் மட்டும் பிறந்தநாள் விழாவிற்கு போய் வருகிறேன் என கூறுகிறார். ராதிகா வீட்டிற்கு வரும் போது பார்த்து விட்டால் என்ன செய்வது என கோபி பயத்தில் நடுங்கி கொண்டிருக்கிறார். இந்த சமயம் பார்த்து ராமமூர்த்தி தாத்தாவிற்கும் பேச்சு வந்து விடுகிறது. தன்னை பற்றிய உண்மையை கூறிவிடுவாரோ என பயத்தில் நடுங்கி கொண்டிருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
பின்பு, ராதிகாவும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்கிறார். ராதிகாவின் கண்ணில் மாட்டிவிட கூடாது என்பதற்காக பின்பக்க வாசல் வழியே தப்பித்து ஓடுகிறார். எதற்காக ராதிகா வீட்டிற்கு வரும்போதெல்லாம் கோபி இப்படி செய்கிறார் என குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே சந்தேகம் வருகிறது. பின்பு தான் கோபிக்கு வீட்டில் நடுப்பகுதியில் ராதிகாவும் கோபியும் இருக்கும் புகைப்படம் இருக்குமே அந்த புகைப்படத்தை ராதிகா பார்த்து விட்டால் பிரச்னையாகி விடும் என கோபி அலறியடித்துக் கொண்டு புகைப்படத்தை கழட்ட போகும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.