ரேஷன் கடைகளில் Google Pay, PayTM வசதி? அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கூகுள் கூகுள்பே, பேடிஎம் போன்ற மின்னணு முறையில் பணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகப்படுத்த உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும் இந்த முறைக்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டுறவு அமைச்சர்:
இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை தவிர மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் மக்களுக்கு பல பயனுள்ள சலுகைகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள வசதியினை அதிகரிப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதாவது, கண்காணிப்பு கேமரா வசதி, ஆன்லைன் சிஸ்டம், வை பை வசதி உள்ளிட்ட வசதிகள் செயல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கோபியை போலீசில் மாட்டி விடும் ராதிகா, ஆடி போன குடும்பம் – வெளியான ஷாக் ப்ரோமோ!
மேலும் ரேஷன் கடைகளில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல்கள் குறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு என்று சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கூகுள் கூகுள்பே, பேடிஎம் போன்ற மின்னணு முறையில் பணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வாடகை கட்டடங்களில் இயங்கும், 6,907 கடைகளுக்கு, ஆண்டுக்கு, 300 வீதம் சொந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு தர கட்டுப்பாடு தொடர்பான, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றும், உணவு பொருட்கள் இருப்பு வைப்பதற்கு தேவையான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்றும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரேஷன் கடைகளில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ, 5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர்கள் விற்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் 10 ரேஷன் கடைகளை மாதிரி கடைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து சில ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யு.பி.ஐ., டிஜிட்டல் வசதி வாயிலாக பணம் பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு அருகில் காலியிடங்கள் இருந்தால் 50 ஆயிரம் கிலோ வரையிலான கொள்ளளவு உடைய உணவு பொருட்கள் வைக்கும் கிடங்குகள் கட்டப்பட்ட உள்ளது. இதை தவிர ரேஷன் கடைகளில் உள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை எவர்சில்வர் கொள்கலன்களில் வைத்து விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்