பணிநீக்க நடவடிக்கையில் பிரபல நிறுவனம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்!!
முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் சீனாவில் உள்ள தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது.
கூகுள் பணிநீக்கம்
உலகளவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. பொருளாதார மந்தநிலை மற்றும் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இந்த பணிநீக்கங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், உலகின் முன்னணி தேடுபொறி தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட், சமீபத்தில் 12,000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்திருந்தது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
GPAT 2023 நுழைவுத்தேர்வு: மார்ச் 13 வரை கால அவகாசம் நீட்டிப்பு!!
இது தவிர, இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த ஊழியர்களில் 6 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தகவல் அளித்திருந்தார். இந்த நிலையில், கூகுள் நிறுவனம் தற்போது சீனாவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் மூத்த பதவியில் இருப்பவர்கள் மற்றும் அதிக ஊதியம் பெறும் தொழிலாளர்கள் இந்த பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகிறது.