தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – பெற்றோர்கள் மகிழ்ச்சி!
அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டி:
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கவுள்ளது. மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து 1 -5 ம் வரையிலான மாணவர்களுக்கு மே 13ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதன் படி கடந்த வாரம் முதல் தேர்வுகள் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நேரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்ட்டுள்ளதாக என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதால் நேரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்ட்டுள்ளதாக என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட கூறப்படுகிறது. விடுமுறைக்கு பின் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும் புதிய நேரம் அமலுக்கு வர உள்ளது. டெல்லியில் உள்ளது போல் தமிழகம் முழுவதும் “தகைசால் பள்ளி யாக மேம்படுத்தப்படும். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.