தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
வானிலை ஆய்வு மையம் காற்றழுத்த தாழ்வு பகுதிகளில் ஏற்படக்கூடிய புயலின் கணிப்புகளையும், சூறாவளி ஏற்படவுள்ள பகுதிகளையும், மேலும், மழை வரக்கூடிய வாய்ப்புகளை கொண்ட பகுதிகளின் தகவல்களை வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம்:
இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. அதனால் காற்றழுத்த தாழ்வு இன்னும் அதிகரித்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. . மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெறுவதால் 08.05.2022 அன்று புயலாக மாரி வடமேற்கு திசையில் இருந்து நகர்ந்து 10.05.2022 அன்று மலை வட ஆந்திரா – ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TNPSC – Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய வெளியீடு..!
சூறாவளி காற்று :
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும், தமிழ் நாட்டில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாருர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி,கரூர், பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம்,நாமக்கல்,தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.