மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் நல்ல செய்தி – வெளியான முக்கிய அப்டேட்!
நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது வழங்கப்படும், எவ்வளவு வழங்கப்படும் என்பது குறித்த அப்டேட்டும் அவ்வப்போது வருகிறது.
அகவிலைப்படி உயர்வு
இந்தியாவில் இந்த மாதம் நவராத்திரி, தீபாவளி என வரிசையாக பண்டிகை வர இருக்கிறது. அதனால் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்விற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த முறை அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பின்படி, அது ஜூலை 1,2023 முன்தேதியிட்டு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (சிபிஐ-ஐடபிள்யூ) அடிப்படையிலான டிஏ கணக்கீட்டு சூத்திரத்தின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத உயர்வு இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. மத்திய பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பல மாநில அரசுகள், மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் ஒரே நாளில் சட்டென்று குறைந்த தங்கத்தின் விலை – உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்!
பொதுவாக மார்ச், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில் இந்த மாதம் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.