காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரிமல் புயலாக வலுப்பெற வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து கோடை மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக குளுமையான சூழல் நிலவியுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி என மொத்தம் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு – தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ரிமல் புயல் இன்னும் சற்று நேரத்தில் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் அது வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் இன்று நள்ளிரவு கரையைக் கடக்க கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ரிமல் புயலாக வலுப்பெற்ற நிலையில், இன்று காலை அதி தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.