ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு – தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதை தொடர்ந்து பள்ளிகள் துவங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை:
தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்வானது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. 2024-25 ஆம் கல்வியாண்டில் வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். எனவே பள்ளிகள் துவங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தங்கம் வாங்க போறிங்களா? இன்றைய தங்கத்தின் விலை இதோ!
அதன்படி பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஆய்வகம், கழிப்பறைகள் உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் நன்கு தூய்மைபடுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.