தடாலடியாக உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.280 அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சி!
இன்று (26.01.2023) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.43,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயரும் விலையால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தங்கம் விலை:
டாலரின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவி வரும் அழுத்தம் உள்ளிட்ட பல காரணிகளால் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றம் நீடித்து வருகிறது. மேலும் குறிப்பாக சொல்ல போனால் உலகளவில் தொடர்ந்து நீடித்து வரும் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் போன்றவையும் தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கம் விலையானது 4% ஏற்றத்தினை கண்டுள்ளது. தொடர்ந்து தங்கம் விலை உயர்வை சந்தித்த நிலையில் நேற்று அத்தி பூத்தார் போல தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. அதாவது நேற்றைய (25.01.2023) நிலவரப்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,345-க்கு விற்பனையானது. அதே போல சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.42,760-க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (26.01.2023) சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.43,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,380க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.