திருப்பூரில் பிப்.11ம் தேதி அன்று 1000 நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணிடாதீங்க!!
திருப்பூர் மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி 11ம் தேதி அன்று 1000 நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான முழு விவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் (கரூர்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 1000க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருக்கும் 2000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.62,000/- சம்பளத்தில் அரசு வேலை!
மேலும் இது தொடர்பான அறிவிப்பில், திருப்பூர் மாவட்டம், சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற பிப்ரவரி 11ம் தேதி அன்று காலை 7.30 மணி முதல் 4:30 மணி வரை மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, வணிகம், நர்சிங், பொறியியல் பட்டம் உள்ளிட்ட முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாம் மூலமாக தேர்வு செய்யப்படும் நபர்கள் மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை பெறுவார்கள். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களின் நகல்களை எடுத்து வர வேண்டும். அத்துடன் நேர்காணலின் போது, சுய விவரக்குறிப்பை எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.