தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் – அடுத்தடுத்து வெளிவரும் மோசடிகள்! குவியும் புகார்கள்!

0
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் - அடுத்தடுத்து வெளிவரும் மோசடிகள்! குவியும் புகார்கள்!
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் - அடுத்தடுத்து வெளிவரும் மோசடிகள்! குவியும் புகார்கள்!
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் – அடுத்தடுத்து வெளிவரும் மோசடிகள்! குவியும் புகார்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு நகைகடன் வாங்கி தருவதாக கூறி வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை வாங்கி,வங்கி ஊழியர்கள் விற்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மோசடி செய்த ஊழியர்கள்:

தமிழகத்தில் சில தினங்களாக வங்கிகளில், வங்கி ஊழியர்கள் மூலம் அதிக மோசடி நடைபெறுவதாக தகவல்கள் வைரலாகி வருகிறது. இந்த வகையில் திருவண்ணாமலை அடுத்த தென்கரும்பலூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 3800 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் அதிமுகவை சேர்ந்த மோகன் என்பவர் தலைவராக இருந்தார். மேலும் அதிமுக ஆட்சியில், அரசு அறிவித்த மகளிர் சுய உதவி குழு கடன், பயிர்க்கடன், கரும்பு பயிர் கடன் என சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை – முக்கிய தகவல்கள் இதோ!

மேலும் அந்த சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் பெயரில் , அவர்களுக்கு தெரியாமலே நகைக்கடன், பயிர்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவி குழு கடன் ஆகியவைகளை கூட்டுறவு சங்க ஊழியர்கள் வாங்கி பண மோசடி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து 100-க்கு அதிகமான கிராம மக்களிடம் நகை கடன் தருவதாக கூறி நகைகளை பெற்றுக்கொண்டு, அந்த நகைக்கடனுக்கான பணம் பின்னர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூட்டுறவு சங்க வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளனர்.

LPG சிலிண்டர் விலை 91.50 ரூபாய் குறைப்பு – ரூ.1907 ஆக நிர்ணயம்! வர்த்தகர்கள் மகிழ்ச்சி!

இருப்பினும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இதுவரை வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவில்லை, இந்த நிலையில் தற்பொழுது கொடுக்காத பணத்திற்கு வட்டி கட்டச் சொல்லி கிராம மக்கள் அனைவருக்கும் கூட்டுறவு சங்க ஊழியர்கள், நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறுகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கூட்டுறவு சங்க ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வாடிக்கையாளர்களிடம் பெற்ற 450 சவரன் தங்க நகைகள் விற்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த முறைகேடு குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!