மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை – முக்கிய தகவல்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள DA தொகை மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் அளிக்கப்படுவது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DA நிலுவை தொகை:
மத்திய அரசு ஊழியர்களின் DA ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படுகிறது. தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் பெருக்குவதன் மூலம் DA கணக்கிடப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA வழங்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
LPG சிலிண்டர் விலை 91.50 ரூபாய் குறைப்பு – ரூ.1907 ஆக நிர்ணயம்! வர்த்தகர்கள் மகிழ்ச்சி!
மத்திய அரசு தனது 2022- 2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதியான இன்று தாக்கல் செய்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியானது பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 மாத நிலுவை தொகையும் ஒரே நேரத்தில் செலுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சம் வரை செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் மூடல் – வலுக்கும் கோரிக்கை!
ஊழியர்களின் நிலுவையில் உள்ள அகவிலைப்படி குறித்து நிதி அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் செலவினத் துறை அதிகாரிகளுடன் கூட்டு ஆலோசனைப் பொறிமுறையின் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் டிஏ நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். நிலை -1 ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,000 வரை இருக்கும். அதேசமயம் நிலை -13 பணியாளர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை டிஏ பாக்கி செலுத்தப்படும். இது குறித்து விரைவில் முடிவு எடுக்க தொழிற்சங்கம் விரும்புவதால் மத்திய அரசு விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.