தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஆட்சியர் முக்கிய உத்தரவு!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் பெற்ற 18412 பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதன்படி அவர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கையெழுத்திட்டு அதை திட்டமாக செயல்படுத்தினார். அதில் மகளிர் இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் பெற்ற தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்ததையும் நிறைவேற்றும் வகையில் அதற்குரிய பணிகள் நடைபெற தொடங்கியது.
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஷாக் – ரோஹித் சர்மாவுக்கு தடை? இதற்காக தான்!
அப்போது நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதி பெறுபவர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி அளிக்க முடிவு செய்யப்பட்டு நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தங்க நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானோர், தகுதியற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஏராளமானோர் தகுதியற்றோர் பட்டியலில் இருந்தனர். அதனால் எவ்வித நிபந்தைகளின் இன்றியும் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு அனுமதி அளித்ததை அடுத்து நிபந்தனைகளின் படி தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற 18412 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். வேளாண் உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்-1, வேதாரண்யம் ஊரக வளர்ச்சி வங்கி -1,கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் – 9 என மாவட்டத்தில் உள்ள மொத்த 73 கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்ற 18,412 நபர்களின் கடன் தொகை ரூ.5371.27 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.