தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு – முதல்வரின் பதிலடி!
தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி சட்டசபையில் நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் 2022-2023 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் முக்கியமாக நகைக்கடன் தள்ளுபடி குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் ஆட்சி பொறுப்பை பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் தங்களது தேர்தல் அறிக்கைகள் பலவற்றை கூறியிருந்தனர். அந்த வகையில் அவர்களின் தேர்தல் அறிக்கையில் ஒன்றாக இருந்த விவசாயிகளின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய இருப்பதாக கூறி இருந்தார் முதல்வர். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு மிகாமல் அடகு வைத்து விவசாயிகள் பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய இருப்பதாக அறிவித்தார். மேலும் அவர் அறிவித்தது போல ஆட்சிக்கு வந்த உடன் பல மாவட்டங்களில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – இதை செய்யாவிட்டால் ரூ.7 லட்சம் ரூபாய் வரை நஷ்டம்!
இந்நிலையில் சென்ற 18 ஆம் தேதி சட்டசபையில் நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் 2022-2023 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனால் இன்று காலை 10 மணி முதல் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய ஒன்றாக நகைக்கடன் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதாவது, 5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வைத்தவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மு. க ஸ்டாலின் கூறியதாவது, 5 சவரனுக்கு கீழ் அடகு வைத்து தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை என ஆதாரம் கொடுங்கள், அவ்வாறு ஆதாரம் கொடுத்தால் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது என்றும் முறைகேடு செய்தவர்களுக்கு நகைக்கடனை தள்ளுபடி செய்ய சொல்கிறீர்களா? என பழனிசாமிக்கு முதல்வர் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.