மீண்டும் கர்ப்பமாகும் ஜெனி – கருவை கலைக்க சொல்லுவாரா செழியன்? சீரியலில் புதிய திருப்பம்!
பாக்கியாவிடம் கோபி மாட்டுவாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் ஜெனி மீண்டும் கர்ப்பமாவது போன்றும், செழியனிடம் சொல்லலாமா வேண்டாமா என ஜெனி சிந்திக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராதிகாவை கோபி திருமணம் செய்துகொள்வாரா அல்லது பாக்கியாவை புரிந்து கொண்டு கோபி மனசு மாறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் பாக்கியாவிடம் கோபி மாட்டிக்கொள்வது போல வந்து தப்பித்துக்கொண்டே தான் இருக்கிறார். கோபி என்ன தான் பொய் சொன்னாலும் கூட பாக்கியா அப்படியே நம்பி விடுகிறார். பாக்கியாவின் அப்பாவி தனத்தை கோபி தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
ராதிகாவும் பாக்கியாவிடம் நன்றாக தான் பழகி கொண்டிருக்கிறார். இதனால் கோபியின் புகைப்படத்தை ராதிகா பாக்கியாவிடம் காட்டிவிடுவாரோ அல்லது ஏதேனும் உளறி விடுவாரோ என பயந்து ராதிகா மற்றும் பாக்கியா இருவரையும் பிரிக்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு நடுவே ஜெனி மீண்டும் கர்ப்பமாவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு முறை ஜெனி கர்ப்பமாக இருந்தார். அப்போது செழியன் நாம் வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் தற்போதைக்கு குழந்தை வேண்டாம் என கூறுகிறார். ஆனால், ஜெனிக்கு குழந்தை பெற்றுக்கொள்ள அவ்வளவு ஆசை.
விஜய் டிவி ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ஜீவாவை கேள்வி கேட்ட ப்ரியா!
ஜெனி குழந்தையை கலைக்க மாட்டேன் என கூறியதால் அவ்வப்போது ஜெனியுடன் சண்டை போட்டபடி இருந்தார். இதற்கு பின்பு, தானாகவே ஜெனிக்கு கரு கலந்துவிட்டது. கரு கலைந்ததும் ஜெனி செழியன் மீது கொலை வெறியில் இருந்தார். பின்பு, அனைத்தையும் மறந்துவிட்டு செழியனுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஜெனி கர்ப்பமாவது போன்றும், செழியனிடம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறலாமா அல்லது செழியன் குழந்தை மீண்டும் கலைக்க சொல்லுவாரா என ஜெனி யோசிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.