தமிழகத்தில் சாலையோர உணவுக் கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் – அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்து வருகிறது. அதனால் முகவரி இல்லாத சாலையோர கடைகள் நடத்தி வருபவர்கள் பெரும் சிரமத்தில் இருப்பதால், அவர்களுக்கான சூப்பர் அறிவிப்பு குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கேஸ் சிலிண்டர்:
தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது ரூ. 1000க்கு மேல் விற்கப்படும் சிலிண்டரை, மக்கள் வேறு வழி இன்றி வாங்கி வருகின்றனர். மேலும் ஆண்டுக்கு 12 சிலிண்டர் மட்டும் தான் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் சாலை ஓரமாக வீடு இல்லாமல், முகவரி இல்லாமல் தள்ளுவண்டிகளில் உணவுக் கடைகள் நடத்தி வரும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தமிழக அரசு பள்ளியில் நேர்ந்த அவலம்.. தவிக்கும் மாணவர்கள் – அரசின் நடவடிக்கை என்ன?
Exams Daily Mobile App Download
சிலிண்டர் இல்லாமல், மண்ணெண்ணெய் இல்லாமல் அவர்கள் கடைகளை நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் சாலையோரத்தில் முகவரி இல்லாத கடைகளுக்கு சிலிண்டர் வழங்க வேண்டும் என, கூட்டுறவுத் துறை மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி , கூட்டுறவு துறை சார்பில் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முகவரி இல்லாமல் இருக்கும் சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு துறை மூலம் 2 கிலோ,5 கிலோ கேஸ் சிலிண்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது பரிசோதனை முறையில் திருவல்லிக்கேணியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என கூட்டுறவுத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டுறவு சொசைட்டி மூலம் சாலையோர கடைகளுக்கு ஒரு வாரத்தில் கேஸ் சிலிண்டர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்