தமிழக அரசு பள்ளியில் நேர்ந்த அவலம்.. தவிக்கும் மாணவர்கள் – அரசின் நடவடிக்கை என்ன?
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா சீதக்கமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளி, இடி விழுந்து சேதமடைந்துள்ள நிலையில், அந்த பள்ளியில் படிக்கக் கூடிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
பள்ளி சேதம்:
தமிழகத்தில் பள்ளிக் கட்டிடங்கள் சீரமைக்கப்படுவது குறித்து ஏகப்பட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும் ஒழுங்கான பராமரிப்பில் இல்லாத கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, மீண்டும் புதிய கட்டிடம் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா சீதக்கமங்கலம் ஊராட்சியில் மேல ராமன் சேத்திபகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
நேற்று காலை அந்த மாவட்டம் முழுவதும் பயங்கரமான மழை பெய்தது. அப்போது அப்பள்ளியில் உள்ள தென்னை மரத்தில் இடி விழுந்து பள்ளியின் கட்டிடம் முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த பள்ளியானது கடந்த 2016 ஆம் ஆண்டு தான் புனரமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் இன்னும் சில வேலைகள் இருக்கும் நிலையில் அதை சரி செய்யாமல் பள்ளி இயங்கி வந்தது. இந்த பள்ளியில் தனி தனியே வகுப்புகள் இல்லாமல் ஒரே வகுப்பில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்துகின்றனர்.
மூன்றாக பிரியும் தலைநகர் சென்னை – CMDA எடுத்துள்ள அதிரடி முடிவு! விரைவில் முதல்வர் ஆலோசனை!
Exams Daily Mobile App Download
இந்த பள்ளியானது 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதால், மேற்கூரை சரியாக இல்லாமல் அடிக்கடி மாணவர்கள் மீது ஓடு விழும் நிலை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய பல முறை அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே தற்போது பள்ளிக் கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்