அரசின் தலையீட்டிற்கு பிறகும் உச்ச விலை நிர்ணயிக்கும் ஆம்னி பஸ்கள் – குமுறும் பயணிகள்!

0
அரசின் தலையீட்டிற்கு பிறகும் உச்ச விலை நிர்ணயிக்கும் ஆம்னி பஸ்கள் - குமுறும் பயணிகள்!
அரசின் தலையீட்டிற்கு பிறகும் உச்ச விலை நிர்ணயிக்கும் ஆம்னி பஸ்கள் - குமுறும் பயணிகள்!
அரசின் தலையீட்டிற்கு பிறகும் உச்ச விலை நிர்ணயிக்கும் ஆம்னி பஸ்கள் – குமுறும் பயணிகள்!

தமிழகத்தில் பண்டிகை காலம் மற்றும் தொடர் விடுமுறையால் தனியார் ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் தடை விதித்துள்ள போதிலும், தொடர்ந்து அதிக விலையில் ஆம்னி பஸ் டிக்கெட்டுகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

ஆம்னி பஸ் கட்டணம்:

தமிழகம் முழுவதும் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு, பயணிகளின் நலன் கருதி பேருந்துகளை வழக்கத்தை விட கூடுதல் எண்ணிக்கையில் இயக்கும். இதற்கான முன்பதிவுகளும் முன்னதாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு தொடங்கிவிடும். ஆனால் பணி நிமித்தமாகவும் பலர் சொந்த ஊர்களை விட்டு முக்கிய நகரங்களில் குடியிருந்து வருவதால், பண்டிகை காலங்களில் அரசு நினைப்பதை விட அதிக மக்கள் பேருந்து பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காமல் அல்லது விரைவாக செல்வதற்காக பலர் தனியார் ஆம்னி பஸ்களை நாடி செல்கின்றனர்.

இந்த வாய்ப்பை தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயன்படுத்தி டிக்கெட் கட்டணத்தை அதிக விலையில் உயர்த்தி விற்பனை செய்கின்றனர். இது தொடர்பாக, அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வைக்கப்பட்டு வந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்னதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் கட்டண நிர்ணயம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு, மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தனியார் ஆம்னி பேருந்துகள் விலை நிர்ணயம் செய்வார்கள் என்று அறிவித்தார்.

தமிழகத்தில் சாலையோர உணவுக் கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் – அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அமைச்சர் இது தொடர்பாக பேசியுள்ள போதிலும், இன்னும் ஆம்னி பேருந்துகளில் அதிக விலை வசூலிக்கப்படுவது நடந்து வருகிறது. அதன்படி, சென்னையில் இருந்து நெல்லை செல்ல ஆன்லைன் வழியில் புக் செய்யப்படும் டிக்கெட் ஒன்றிற்கு ரூ.2,500 முதல் ரூ.3,999 வரையும், கோவை செல்ல ரூ. 2,800 முதல் ரூ. 3,200 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!