திருச்சி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 20 முதல் காந்தி மார்க்கெட் திறப்பு!
தமிழகத்தில் கொரோனா காரணமாக பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் ஜூன் 20 ஆம் தேதி முதல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததை தொடர்ந்து, தடுப்பூசி செலுத்தி கொண்ட வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேலும் கோயம்பேடு மார்க்கெட் போன்ற பெரிய காய்கறி மார்கெட்டுகள் மூடப்பட்டன. வீதிகளுக்கு வண்டிகள் மூலமாக காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 இறுதி நாள் – அறிவிப்பு!
இந்நிலையில் ஜூன் 14 முதல் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்தது. அதில் கோயம்பேடு போன்ற பெரிய மார்கெட்டுகள், அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை திறந்திருக்க தளர்வுகள் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
ஆனால் திருச்சி மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக மார்கெட்டுகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது திருச்சி காந்தி மார்க்கெட் ஜூன் 20 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி குறிப்பிட்ட நேரங்களில் மொத்த மற்றும் சில்லறை வியாபாரங்கள் நடைபெறும் எனவும், தடுப்பூசி போட்டுக்கொண்ட வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.