தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 இறுதி நாள் – அறிவிப்பு!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 30ம் தேதி இறுதி நாளாகும்.
தமிழக அரசின் விருது:
தமிழகத்தில் அனைத்து துறைகளில் பணியாற்றிய சிறந்த அதிகாரிகள், பொதுமக்களுக்கு சேவை செய்தவர்கள், வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்கள், முதியோருக்கு உதவியவர்கள் போன்ற பலரின் செயல்களையும் பாராட்டும் விதமாகவும், அவர்களின் செயல் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசு ஆண்டுதோறும் சுதந்திர தினவிழாவில் பாராட்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொடுத்து கௌரவிக்கும்.
தமிழகத்தில் E-Pass கட்டுப்பாடுகள் எதிரொலி – வாகன வரத்து குறைவு!
நடப்பு ஆண்டிற்கான தமிழக அரசின் விருதுகள் பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும், அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அனைத்து துறையினருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் விருது பெறுவதற்கு பொதுமக்களும் விண்ணப்பிக்க செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு தேர்வானவர்களுக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ், ரொக்கப்பரிசு ஆகியவை அரசு சார்பில் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு பணி செய்தோர் அரசின் விருதுக்கு ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.