தமிழகத்தில் E-Pass கட்டுப்பாடுகள் எதிரொலி – வாகன வரத்து குறைவு!
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகன வரத்து குறைவாக காணப்பட்டு வருகிறது.
இ-பாஸ்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற ஜூன் 21ம் தேதி முதல் முடிவுக்கு வரவுள்ளது. தமிழக அரசு இதுகுறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை குறைக்கும் வகையில் இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் – அமைச்சர் விளக்கம்!!
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருவதற்கு இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி வண்டிகள் தவிர்த்து மக்கள் வருகை தரும் கார் போன்றவற்றின் போக்குவரத்து மிக குறைவாக காணப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழக-கர்நாடக எல்லை கக்கநல்லா பகுதியில் வாகன வரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் காய்கறி, சரக்கு வாகனங்கள் மட்டுமே அதிக அளவில் வந்து செல்கிறது.
TN Job “FB Group” Join Now
வாகன வரத்து குறைவுக்கு காரணம் தமிழக இ-பாஸ் முறை தற்போது கடுமையாக்கப்பட்டு வருகிறது. இதனால் தான் எல்லை பகுதியில் போக்குவரத்து குறைவதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக எல்லை அருகே கார்களில் வருபவர்களிடம் இ-பாஸ் முறையாக இருக்கிறதா என்பதை சோதிக்கப்பட்ட பின்பே அவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் கேரள-தமிழகம் எல்லை பகுதியான நாடுகாணி, சேரம்பாடி, நம்பியார்குன்னு, பாட்டவயல் சோதனைச் சாவடிகளும் வாகன வரத்து குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.