மூன்றாவது நாளாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த சில நாளுக்கு முன்பாக கலவரம் நடந்தபோது விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்றும், மூன்றாவது நாளாக நீட்டிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
முழு ஊரடங்கு
இந்த வார தொடக்கத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஈத்-உல்-பித்ர் பண்டிகையன்று நடந்த வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் இன்று (மே.6) மூன்றாவது நாளாக நீட்டிக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜோத்பூர் நகரின் எல்லைக்குட்பட்ட 10 காவல் நிலைய பகுதிகளில் இன்று (மே 6) நள்ளிரவு வரை இக்கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
இப்போது நகரில் அமைதியான சூழல் நிலவுவதாகவும், இரு சமூகத்தினரிடையே நம்பிக்கையை வளர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வட்டாரங்களில் அமைதிக் குழுக் கூட்டங்களை ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையில் ஜோத்பூரில் மொபைல் இணைய சேவைகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கு முன்னதாக வன்முறையின் பேரில் கைது செய்யப்பட்ட அனைத்து அப்பாவி மக்களும் விடுவிக்கப்படுவார்கள் என்று நிர்வாகம் உறுதியளித்தது. இதற்கிடையில், ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தின் சங்கனேர் நகரில், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சில அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த நபர்கள் இருவரை தாக்கி, மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததால் அங்கு பதற்றம் நிலவியது. இப்போது, அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, 24 மணி நேரம் இணையதள சேவை முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.