சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விலை குறைந்துள்ள நேரத்தை பயன்படுத்தி நகைகள் வாங்க முற்பட்டு வருகின்றனர்.
தங்கம் விலை:
நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கடைகள் , வணிக வளாகங்கள், மூடப்பட்டது. தொழில்கள் முடங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தனர். இந்த நேரத்தில் ஏராளமானோர் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கம் விலை அதிகரித்தது. இதனால் நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அவ்வப்போது தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.
இன்று (மே 6) முதல் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை துவக்கம் – ஜூலை 4 முதல் மீண்டும் வகுப்புகள் திறப்பு!
இந்த நேரத்தில் நிலவிய ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணத்தால் உலக அளவில் பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் விளைவாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் சாமானிய மக்களும், நகைப் பிரியர்களும் நகை வாங்குவதில் பொருளாதார ரீதியான சிக்கலை சந்தித்தனர். ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40,000 ஐ தாண்டியது அதிர்ச்சியை அளித்தது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ரூ. 38,728க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் 4,841 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 66.50 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 66,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நகை விலை குறைந்துள்ளதை அடுத்து நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.