வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு தேவையில்லை – அமைச்சர் விளக்கம்!
நாடு முழுவதும் கொரோனாவால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு தேவை இல்லை என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தேவை இல்லை:
கொரோனா வைரஸ் பல மாநிலங்களில் ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதே போல பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
அதனால் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் மக்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் மருத்துவமனைக்கு வருவதில்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். அதனால் வார இறுதி நாட்கள் ஊரடங்கு தேவையற்றது என சொல்லி இருக்கிறார். கொரோனா பாதித்த மக்களின் உடல் ஆரோக்கியம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அதனால் ஊரடங்கு அமல்படுத்துவது தேவையற்றது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – பொங்கல் பரிசில் தரமற்ற பொருட்கள்!
இருந்தாலும் மத்திய அரசு வெளியிட்டுள்ள கொரோனா விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். கொரோனா விதிமுறைகள் குறித்து மக்கள் பின்பற்ற தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இது பற்றி முதல்வர் பசவராஜ் பொம்மையிடமும் பேசி இருக்கிறேன். அப்போது ஊரடங்கு தேவையில்லை என நான் சொல்லி இருக்கிறேன். மத்திய அரசு அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த மாத இறுதிக்குள் கொரோனா பரவல் குறைய தொடங்கும் என்று உலக சுகாதார நிபுணர்களும் தெரிவித்துள்ளனர் என விளக்கம் அளித்து இருக்கின்றனர்.