தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – பொங்கல் பரிசில் தரமற்ற பொருட்கள்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொருட்கள் தரமற்றதாகவும், எடை குறைவாகவும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த பரிசு பொருள் தொகுப்பு தமிழகத்தில் உள்ள சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்பட்டது. இதனால் அரசுக்கு 1,088 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது.
தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கியுள்ளது. அத்துடன் இந்த பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் விரைவில் பள்ளிகள் திறப்பு? ஜனவரி 20ம் தேதி அரசு ஆலோசனை!
இந்த பொங்கல் பரிசை பெற்று கொண்ட பொதுமக்கள் தற்போது அதிருப்தியில் உள்ளார்கள். ஏன்னெனில் பொங்கல் தொகுப்பில் 21 பொருட்களுக்கு பதிலாக 18 பொருட்களே வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏலக்காய், முந்திரி போன்ற பொருட்கள் எடை சரியானதாக இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கோதுமை மாவில் வண்டு இருப்பதாகவும், வெல்லம் மற்றும் புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்று இருப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். அத்துடன் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பரிசு வழங்கப்படாததால் குடும்ப அட்டைதாரர்கள் மிகவும் அதிருப்தியில் இருக்கின்றனர்.