தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய தபால்துறை தமிழகத்தில் உள்ள கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட அஞ்சல் கோட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்தோர் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேடி வரும் இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன் வந்துள்ளது. அதன்படி தற்போது மத்திய மாநில அரசுகள் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்து வருகின்றனர். மற்ற துறைகளை தொடர்ந்து அஞ்சல் துறையும் வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது.
Post Office 5 வருட முடிவில் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ் – ஓய்வு பெற்றவர்களுக்கான சிறந்த திட்டம்!
அந்த வகையில் அண்மையில் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை, அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்திய அஞ்சல்துறை மொத்தம் 1,54,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட இயங்கி வரும் மிகப்பெரிய துறையாகும். தற்போது இந்திய அஞ்சல் துறை கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
ஓமைக்ரான் பரவல் அதிகரிக்கும் போதிலும் ஊரடங்கு கிடையாது – அரசு அறிக்கை!
அஞ்சல் துறையில் காலியாக உள்ள 17 Staff Car Driver பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யபடடவுள்ளனர். 56 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு Merit List Certificate Verification மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.18,000 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் 10ம் தேதிக்குள் The Manager Mail Motor Service, Goods Shed Road, Coimbatore – 641001 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.