தமிழகத்தில் மே 1 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்? வைரலாகும் செய்தி! உண்மை நிலவரம் என்ன?

0
தமிழகத்தில் மே 1 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்? வைரலாகும் செய்தி! உண்மை நிலவரம் என்ன?
தமிழகத்தில் மே 1 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்? வைரலாகும் செய்தி! உண்மை நிலவரம் என்ன?
தமிழகத்தில் மே 1 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்? வைரலாகும் செய்தி! உண்மை நிலவரம் என்ன?

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவிக் கொண்டிருக்கும் வேளையில் மே 1 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல் எனவும், பேருந்துகள் இயங்காது எனவும் வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

ஊரடங்கு:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்தது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி பல அப்பாவி மக்கள் பலியாயினர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகத் தான் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. இதுமட்டுமல்லாமல், இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். மேலும், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் எனவும், அப்படி செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய வசதிகள் அறிமுகம்!

இதுமட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தில் பேருந்து சேவைகள், ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கு பிறகு தமிழகத்தில் ஓரளவுக்கு கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தது. கொரோனா பரவல் குறைந்ததுமே மீண்டும் பழையபடி பேருந்து சேவைகள், ரயில் சேவைகள் அனைத்தும் துவங்கப்பட்டன. ஆனால், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளதால் ஊரடங்கு அமல்படுத்துவது மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

ExamsDaily Mobile App Download

இந்நிலையில், தமிழகத்தில் மே 1 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல் எனவும், பேருந்துகள் இயங்காது எனவும் வதந்திகள் பரவி கொண்டிருக்கிறது. இன்று மு.க.ஸ்டாலின் அறிவித்த பிறகுதான் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது தெரியும். யாரும் இதுபோன்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என சுகாதாரத்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!