நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய வசதிகள் அறிமுகம்!

0
நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - புதிய வசதிகள் அறிமுகம்!
நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - புதிய வசதிகள் அறிமுகம்!
நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய வசதிகள் அறிமுகம்!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஓன்று வெளியாகியுள்ளது. அதன்படி சில நிபந்தனைகளின் கீழ், ரேஷன் கார்டை ஒப்படைக்க ஒரு விதியை அரசு விதித்துள்ளது. அப்படி, ரேஷன் கார்டை ஒப்படைக்காவிட்டால், ஆய்வுக்கு பின், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். மேலும், அந்த குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதி:

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மீண்டும் ஏழை குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை 2021 ஏப்ரல் மாதம் அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஒரு நபருக்கு 5 கிலோ கூடுதல் உணவு தானியங்களை (அரிசி அல்லது கோதுமை) ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக வழங்கியது. இந்த உதவி திட்டம் இன்னுமும் நடைமுறையில் இருக்கிறது. இந்தியா முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தி வருவதாகவும், அதில் பொருளாதார ரீதியாக வளமாக இருக்கும் பலர் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ExamsDaily Mobile App Download

இதனால் இலவச ரேஷனை பயன்படுத்த தகுதியான பல கார்டுதாரர்களுக்கு அதன் பலன் கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. அதனால் அரசு ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் எடுக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தர நிலைகளில் மாற்றங்களைச் செய்து வந்தது. இந்த வகையில் புதிய தரநிலையின் வரைவு குறித்து மாநில அரசுகளுடன் பல சுற்றுக் கூட்டங்களும் நடத்தப்பட்டது. மேலும் புதிய தரநிலை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்றப்படும். இதனால் எந்த வித குழப்பமும் மோசடியும் இல்லாமல் செயல்முறை வெளிப்படையாக இருக்கும் என்று அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் புதிய தரநிலை அமலுக்கு வந்தால், இலவச ரேஷன் பொருட்களைப் பெற தகுதியுடையவர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள், தகுதியில்லாதவர்கள் பயன் பெற முடியாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 3% அகவிலைப்படி (DA) உயர்வு!

புதிய விதியின் படி, இலவச ரேஷன் வாங்க தகுதி இல்லாதவர்கள் ரேஷன் கார்டை உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தகுதியில்லாதவர்கள் யாரேனும் ரேஷன் கார்டை ஒப்படைக்கவில்லை என்றால், விசாரணைக்குப் பிறகு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஒருவருக்கு 100 சதுர மீட்டருக்கு மேல் மனை, பிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம் அல்லது டிராக்டர் இருந்தால், குடும்ப வருமானம் கிராமத்தில் 2 லட்சத்துக்கும், நகரத்தில் 3 லட்சத்திற்கும் மேல் இருந்தால், அத்தகையவர்கள் தங்களின் ரேஷன் கார்டை தாசில்தார் மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அப்படி ரேஷன் கார்டை ஒப்படைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!