நாட்டில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!
நமது அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அமலில் உள்ள முழு ஊரடங்கை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
முழு ஊரடங்கு:
உலகில் உள்ள நாடுகள் அனைத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த தொற்று பிறந்த நாடு சீனாவில் உள்ள வூகான் பகுதியில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் பரவியது. இந்நிலையில் தற்போது தான் சீனா ஊரடங்கில் இருந்து வெளிவந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகமாகி விட்டதால் சீனா மீண்டும் லாக்டவுனைக் கொண்டு வந்துள்ளது. வீடு வீடாக சென்று டெஸ்ட் போன்ற பல நடவடிக்கைகளை செய்து வருகிறது.
ஏப்ரல் 7 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில், சீனாவின் முக்கிய நகரமான ஷாங்காயில் சுமார் 2.6 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால், அமலில் உள்ள முழு ஊரடங்கை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஷாங்காய் நகரில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஷாங்காயில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
ஷாங்காய் நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுமார் 10 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களை சீன அரசு அங்கு அனுப்பி உள்ளது. இதில் 2,000 பேர் ராணுவ மருத்துவப் பணியாளர்கள். இதற்கிடையே, தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவது சீன மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.