ஏப்ரல் 4 வரை முழு ஊரடங்கு – அதிபர் அறிவிப்பு!
இலங்கையில் அதிகரித்து வரும் விலைவாசியை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஏப்ரல் 3 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊரடங்கு:
கடந்த 2019ம் ஆண்டு சீனா நகரம் உஹான் மாநிலத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகளை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும். தடுப்பூசிகளை செலுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொது முடக்கத்தை நாடுகள் அறிவித்தது.
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
மற்ற நாடுகளை தொடர்ந்து இலங்கையிலும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவியதால் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தற்போது அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கப் தேநீரின் விலை 100 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலை வந்துள்ளது. மேலும் சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் – டீசல், அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த விலை ஏற்றத்தை எதிர்த்து பொது மக்கள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுளள்னர்.இதனால் அவர் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையை சமாளிக்க அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் மாலை 6 மணி முதல், நாளை மறுநாள் காலை அதாவது வரும் 4ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.