தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்டு மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு மீண்டுமாக உயரத் துவங்கி இருக்கிறது. இதுவரை கொரோனாவின் 3 அலைகளை எதிர்கொண்டு இப்போது தான் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிம்மதியான சூழலில் இந்தியாவின் சில வட மாநிலங்களில் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைய துவங்கி இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 14,038 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இந்தியா வந்தவர்களில் 3 பேர் உட்பட 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – நாளை (ஜூன் 11) சிறப்பு முகாம்!
இந்த புதிய எண்ணிக்கையானது தமிழகத்திலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலும் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வரும் ஜூன் 12ம் தேதியன்று தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் இடங்களில் நடைபெற இருக்கும் மெகா தடுப்பூசி முகாம்களில் பொது மக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் முறையான சுகாதார நெறிமுறைகளை கைக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா பாதிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பட்சத்தில் மீண்டும் முழு ஊரடங்கு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது குறித்த கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.