சென்னை ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – நாளை (ஜூன் 11) சிறப்பு முகாம்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள், மாதந்தோறும் உணவு பொருட்களை பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்த கார்டில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய ஜூன் 11-ம் தேதி (நாளை ) சென்னையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாம் குறித்து முழு விவரத்தையும் இப்பதிவில் பார்க்கலாம்.
சிறப்பு முகாம்:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடை மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கும் போது இருப்பிட சான்றுக்கான முக்கிய ஆவணமாக, ரேஷன் கார்டுகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதையடுத்து தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகையும் ரேஷன் கார்டு வாயிலாக பொதுமக்களுக்கு சென்றடைவது குறிப்பிடத்தக்கது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்!
மேலும் ரேஷன் கடைகளில் தொடர்ந்து நடைபெறும் பல்வேறு மோசடிகளை தடுப்பதற்கு புதிய புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டையை அப்டேட் உடன் வைத்திருப்பது அவசியம் ஆகும். இந்நிலையில் குடும்ப அட்டையில் உள்ள பிழைகளை திருத்த ஜூன் 11-ம் தேதி (நாளை) சென்னையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடும்ப அட்டை திருத்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 11-ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் .
Exams Daily Mobile App Download
இந்த சிறப்பு முகாமில் புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் சேவை நடைபெறும். நியாய விலை கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும். மேலும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியும் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே, சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் ஜூன் 11-ஆம் தேதியை நினைவில் வைத்துக் கொண்டு தங்கள் குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.