தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முழு ஊரடங்கு
இந்தியாவில் முதன் முதலில் 2020ம் ஆண்டு கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து கொரோனாவின் 2 மற்றும் 3ம் அலைகள் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் மீண்டும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் ஏற்பட்ட புதிய சிக்கல்!
அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டில் தொற்று அதிகம் பரவிய 10 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ECGC மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.16 லட்சம் ஊதியத்தில் வேலை – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
மேலும் இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, பிற நாடுகளில் கொரோனாவின் 4ம் அலையின் தாக்கம் பரவ வாய்ப்பு உள்ளது. இதே போல் தமிழகத்திலும் கொரோனா பரவலின் 4ம் அலையின் தாக்கம் பரவ வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார். அத்துடன் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் மற்ற நாடுகள் கொரோனா தொற்றால் சிரமப்பட்டு வருவது போல தமிழகத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சமயத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.