CSIR NIO தேசிய நிறுவனத்தில் ரூ.88,687 ஊதியத்தில் பணிவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!
CSIR – தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனம் (NIO) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Scientist பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | CSIR – National Institute of Oceanography (NIO) |
பணியின் பெயர் | Scientist |
பணியிடங்கள் | 22 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.03.2022 to 30.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CSIR NIO காலிப்பணியிடங்கள்:
வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனத்தில் Scientist பதவிக்கு என மொத்தமாக 22 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
CSIR NIO கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CSIR NIO வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
CSIR NIO ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.88,687/- ஊதியம் அளிக்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.
CSIR NIO விண்ணப்ப கட்டணம்:
பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் SC / ST / PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.
TNPSC Coaching Center Join Now
CSIR NIO தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் (Interview) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.
CSIR NIO விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை 23.03.2022 ம் தேதி முதல் 30.04.2022 ம் தேதி மாலை 5.30 மணி வரை மட்டுமே பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இயலும். சமர்ப்பித்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 16.05.2022 ம் தேதிக்குள் வந்து சேரும்படி தபால் செய்யவும்.