8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு !
விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் 21.12.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணி காலியாக உள்ளது என அறிவித்துள்ளார். இந்த பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி என்பதே போதுமானது ஆகும். எனவே இந்த பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது, சம்பளம் போன்ற விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் (DCCC) |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் (Office Assistant) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DCCC காலிப்பணியிடம்:
விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணி காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளியில் பெற்றவராக இருக்க வேண்டும்.
- இந்த பணிக்கு SC(A), அருந்ததியர் பெண்கள், அருந்ததியர் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 1.7.2022 அன்று நாள் கணக்கின்படி 18 முதல் 37 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
வருமானம்:
விண்ணப்பதாரருக்கு அவரது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் வருமானம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நிறுவனத்தின் முகவரிக்கு 28.3.2022 கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், மாவட்ட நீதிமன்ற வளாகம், திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம் – 626 135.