TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் ஏற்பட்ட புதிய சிக்கல்!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்து வருபவர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் எவ்வாறு விண்ணப்பிப்பது என்று திணறி வருகின்றனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு:
தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கம் கடந்த இரு ஆண்டுகளாக கொடூரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான தேதியும் தெரிவித்து உள்ளது பள்ளிக்கல்வித்துறை. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று இருந்த காரணத்தால் கடந்த இரு ஆண்டுகளாக அரசுத் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வராமல் இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் tnpsc குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளது. இதனால் பட்டதாரிகள் அனைவரும் ஆர்வமுடன் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – விநியோகம் தொடக்கம்!
இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதியை கடந்த மாதம் வெளியிட்டது தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம். பிளஸ் 12 மற்றும் பி. எட் படித்து முடித்த மாணவ மாணவிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்து இருக்க வேண்டும். ஆனால் அதிகபட்ச வயது வரம்பு தேவையில்லை என்றும் தெரிவித்து உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக பொதுப்பிரிவினர், எம்பிசி , பி சி பிரிவினருக்கு ரூ 500 என்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ 250 என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த தேர்வுகள் தாள் 1 ஜூன் 27 ஆம் தேதி அன்று, தாள் 2 ஜூன் 28 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முறையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் அதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 13 ஆம் தேதி என்றும் அறிவித்து உள்ளனர்.
NLC நெய்வேலி லிக்னைட் நிறுவன வேலைவாய்ப்பு – சற்றுமுன் வெளியானது !
இந்நிலையில் இணையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தேர்வுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது சிரமம் ஏற்படுகிறது. இந்த காரணத்தால் தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலான ஆசிரியராக பணியில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதிக்கான, ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது முக்கிய ஒன்றாக உள்ளது. இதனால் பி.எட் முடித்த பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.