தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – விநியோகம் தொடக்கம்!

0
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - விநியோகம் தொடக்கம்!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - விநியோகம் தொடக்கம்!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – விநியோகம் தொடக்கம்!

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் கார்டு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கு மற்றும் தேர்தல் காரணமாக ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

ரேஷன் கார்டு

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக வழங்கப்படுகிறது. அத்துடன் அரசின் நலத்திட்டங்களை ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. அதனால் ஒவ்வொரு நாளும் ரேஷன் கார்டுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து முன்பு அலுவலகத்திற்கு சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. மேலும் இந்த ரேஷன் கார்டு பல மாதங்களுக்கு பிறகு பயனாளிகளின் கைகளில் கிடைக்கிறது.

ஜவுளி அமைச்சகத்தில் வேலை – சம்பளம்: ரூ.35,400/-

இப்போது அனைத்து துறைகளிலும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஆன்லைன் முறையில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன் விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் ரேஷன் கார்டை பெற முடியும். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. இதனால் கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் மற்றும் தொற்று பரவல் குறைந்த நிலையில் ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு – முதல்வரின் பதிலடி!

மேலும் இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது, திருப்பூர் மாவட்டத்துக்கு 7,541 ரேஷன் கார்டுகள் வந்துள்ளன. இந்த ரேஷன் கார்டுகள் தாலுகா வாரியாக பிரித்து கொடுக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தாலுகாவில் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ரேஷன் கார்டை பெற விரும்புவர்கள் தாலுகா அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் அவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!