நகரம் முழுவதும் தீவிரமடையும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – பொதுமக்கள் அதிருப்தி!
ஷாங்காய் நகரில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த வாரத்தில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
முழு ஊரடங்கு
சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நகரத்தை சேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட, கொரோனா பரவலைத் தடுக்க கடுமையான முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த கட்டுப்பாடுகளை மக்கள் நேர்மறையாக எடுத்துக் கொள்ளவில்லை. அதாவது ஷாங்காய் மற்றும் வடகிழக்கு மாகாணமான ஜிலினில் உள்ள உள்ளூர்வாசிகள் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளால் மிகவும் சோர்வாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
அந்த வகையில் தற்போது 26 மில்லியன் மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரில் கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு கட்ட பூட்டுதல் விதிக்கப்பட்டது. மேலும் புடோங்கில் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் உணவு விநியோகம், மருந்துகள் மற்றும் சுகாதார சேவைகள் கிடைப்பது குறித்து அரசுக்கு புகார் அளித்துள்ளனர். இந்த பகுதிகளில் உள்ள மக்கள் தினமும் சுய பரிசோதனை செய்துகொள்ளவும், வீட்டில் முகக்கவசங்களை அணியவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் நேரடித் தொடர்பை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்துக்கு 11 மாதங்களில் 2.05 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!
இதற்கிடையில் ஷாங்காயில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 438 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு தகவல்களை சுகாதாரத்துறை தரவு வெளியிட்டுள்ளது. இது சனிக்கிழமை எண்ணிக்கையை விட சற்று அதிகரித்துள்ளது. இதனுடன் ஜிலினில், 4,455 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் சீனாவின் மொத்த பாதிப்புகள் ஆயிரக்கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறியவையாக இருந்தாலும் கடந்த 2019ம் ஆண்டு வுஹானில் முதல் வழக்கு கண்டறியப்பட்டதில் இருந்து கருத்தில் கொள்கையில் இந்த எண்ணிக்கை மிகப்பெரியதாகும்.