தமிழகத்துக்கு 11 மாதங்களில் 2.05 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!

0
தமிழகத்துக்கு 11 மாதங்களில் 2.05 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்துக்கு 11 மாதங்களில் 2.05 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்துக்கு 11 மாதங்களில் 2.05 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததால் பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 11 மாதத்தில் பல்வேறு வெளிநாட்டினர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திற்கு எவ்வளவு கோடி முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது என்று முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து ஏராளமான வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. அத்துடன் பல்வேறு வெளிநாட்டுனர்களும் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்விளைவாக பல வெளிநாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தகவலை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தகவல்களை திருத்துவது எப்படி? ஆன்லைன் செயல்முறைகள் இதோ!

இதில் குறிப்பிட்டுள்ளதாவது, இதுவரை தமிழகத்தில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் கடந்த மாதம் மார்ச் 7ம் தேதி அன்று 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இதன் மூலமாக ரூ.4,488 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் இதனால் தமிழகத்தில் 15,103 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் சாம்சங் நிறுவனத்துடன் ரூ.1,558 கோடி மதிப்பிலான முதலீடுகளை பெற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலமாக 600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளது.

இதே போல் கடந்த மாதம் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான துபாய் சுற்றுப்பயணத்தில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலமாக தமிழகத்திற்கு ரூ.6,100 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டத்துடன் 14,700 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிநாடுகளுடன் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திற்கு 68,375 கோடியே 54 லட்சம் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 402 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!