தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு அறிவித்த விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா என்று பல கேள்விகள் எழுப்பி வருகின்றனர். அதனால் தற்போது தமிழக அரசின் சார்பில் இந்த ஊரடங்கு குறித்து தெரிவித்து உள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் சென்ற இரு ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த கொரோனா தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த பட்டு இருந்தது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் மூலமாகவே பாடங்களை நடத்தி வந்தனர். அதனால் மாணவர்களும் வேறு வழி இன்றி நேரடி வகுப்புகளுக்கு செல்லாமல் தவித்து வந்தனர். மேலும் அதனை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள எல்லா ஊர்களிலும் எந்த திருவிழாக்களும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் சற்று குறைந்த காரணத்தால் மீண்டும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் செய்ய படுமா என்று பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த கேள்விகளுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதை இந்த தொகுப்பில் முழுமையாக பார்ப்போம்.
ரயிலில் பயணம் செய்வோருக்கான ஹாப்பி நியூஸ் – 50% வரைக்கும் கட்டணம் குறைப்பு!
அவர் கூறியதாவது, 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை. 9 மாவட்டங்களில் பரவலாக உள்ளது. 1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. உடனடியாக மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு கவலைப்பட வேண்டிய கட்டத்தில் இல்லை. அக்கறை காட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதனை தொடர்ந்து, தர்மபுரி, ராணிப்பேட்டை, மதுரை, திருப்பத்தூர், நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக உள்ளது. மேலும் மாநிலத்தில் 1,000 பேரில் 3 பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகிறது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டும் தான் தற்போது வல்லுநர்கள் கருத்தாக உள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதற்கும், கட்டுப்பாடுகளை தீவிர படுத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. மருத்துவமனைகளில் மின்வெட்டு பிரச்சனை இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.