ரயிலில் பயணம் செய்வோருக்கான ஹாப்பி நியூஸ் – 50% வரைக்கும் கட்டணம் குறைப்பு!
மும்பை லோக்கல் ரயில்கள் மற்றும் ஏசி வசதி கொண்ட லோக்கல் ரயில்களில் ரயில் கட்டணம் 50% வரை குறைக்கவுள்ளதாக மத்திய ரயில்வே இணையமைச்சர் ராவ்சாஹேப் தன்வே தெரிவித்துள்ளார்.
ரயில் கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுமே ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த காரணத்தினால் மீண்டும் பழையபடி போக்குவரத்து சேவைகள் அனைத்தும் துவங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பேருந்து போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து தான் செலவும் கம்மி என்பதால் பலரும் ரயிலில் தான் செல்ல விரும்புகின்றனர்.
TCS & Infosys நிறுவனத்தில் 90,000+ பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விபரம் இதோ!
மேலும், வேலைக்கு செல்பவர்களில் இருந்து பள்ளி மாணவர்கள், கல்லூரி, மாணவர்கள் என அனைவருமே ரயில் போக்குவரத்தை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனையடுத்து மும்பை லோக்கல் ரயில்களில் எக்கச்சக்கமான பயணிகள் பயணித்து கொண்டிருப்பதால் மும்பை லோக்கல் ரயில்கள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், லட்சக்கணக்கான ரயில் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரயில் டிக்கெட் கட்டணத்தை 50% ஆக குறைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மும்பையில் ஏசி வசதி கொண்ட லோக்கல் ரயில்களும் இயங்கி வருகின்றது. இந்த ரயில்களிலும் டிக்கெட் கட்டணம் 50% குறைக்கப்படுவதாக மத்திய ரயில்வே இணையமைச்சர் ராவ்சாஹேப் தன்வே தெரிவித்துள்ளார். தற்போது மும்பை ஏசி லோக்கல் ரயில்களில் 5 கிலோமீட்டருக்கு குறைந்தபட்சமாக 65 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 65 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை இணையமைச்சர் ராவ்சாஹேப் தன்வே தெரிவித்துள்ளார். ஆனால், கட்டண குறைப்பு எப்போதிலிருந்து அமலுக்கு வரும் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.