தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் நாளை ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து நாளை (10.01.2022) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முதல்வர் ஆலோசனை:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் மூன்றாம் அலை தாக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரித்த நிலையில் தற்போது மூன்றாம் அலை பரவி வருகிறது. இது பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். அதனால் மாநில அரசுகள் மத்திய அரசு உத்தரவின் பேரில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
‘பாரதி கண்ணம்மா’ வினுஷா தனது அம்மா பிறந்தநாளிற்கு கொடுத்த சர்ப்ரைஸ் – ரசிகர்கள் உற்சாகம்!
மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கையாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜன.9) ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா – பாண்டிச்சேரி விசிட்!
இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகள் பலனளிக்கிறதா மற்றும் மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துதல், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மருத்துவத்துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலகத்தில் நாளை (11.01.2022) ஆலோசனை நடத்தவுள்ளார். இதன் பிறகு மேலும் புதிய கட்டுப்பாடுகள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு அமலாக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.