டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்புகள்!
தற்போது தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றின் தினசரி நேர்மறை விகிதம் 6.42% ஆக அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
இந்தியாவில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை ஆயிரங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, டெல்லி, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இப்புதிய பாதிப்புகள் அதிகளவு காணப்பட்டு வரும் நிலையில் மக்கள் மீண்டும் ஊரடங்கு குறித்த அச்சத்தில் தவித்து கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வர, நோய்த்தொற்று தொடர்புடைய கட்டுப்பாடுகள் எல்லாம் அகற்றப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தனர்.
Exams Daily Mobile App Download
ஆனால் எதிர்பாராத விதமாக மீண்டும் இந்தியாவில் கொரோனா பரவல் பாதிப்புகள் வேகமெடுக்க துவங்கி இருக்கிறது. அந்த வகையில் தேசிய தலைநகர் டெல்லியில் தொடர்ந்து நான்காவது நாளாக 1,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக தேசிய தலைநகரில் தினசரி வழக்குகளின் நேர்மறை விகிதம் ஏப்ரல் 24ம் தேதியன்று 4.48 சதவீதமாகவும் தற்போது அது 6.42 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. மேலும், டெல்லியில் செயலில் உள்ள வழக்குகள் பிப்ரவரி 12 முதல் அதிகபட்சமாக 4,168 ஆக உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ECIL நிறுவனத்தில் டிகிரி படித்தவர்க்கான வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!
இப்போது, சில நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதினாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், அரசாங்கம் அதற்கு நேர்மாறான பார்வையில் உள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் விகிதம் 2 முதல் 3 சதவீதமாக இருக்கிறது. இருப்பினும் மக்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும், பொது இடங்களில் முகக்கவசங்களை அணியாமல் செல்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.