முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 1 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 1 வரை நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 1 வரை நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 1 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜூன் 1 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சில அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா 2 ஆம் பேரலை காரணமாக கடந்த மாத துவக்கத்தில் இருந்து பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தவிர மேலும் சில மாநிலங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி முதல் மே மாதம் 3 ஆம் தேதி வரை 3 மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் – காவல்துறை எச்சரிக்கை!!

தொடர்ந்து இந்த ஊரடங்கு நடைமுறையானது மே மாதம் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சில அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், பழக்கடைகள், மருந்து போன்ற அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன் படி காலை 8 முதல் 11 மணி வரை இந்த அத்தியாவசிய கடைகள் அனைத்தும் திறந்திருக்கும். மேலும் மே 28 ஆம் தேதி அன்று அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக, காலை 8 மணி முதல் நண்பகல் வரை பொதுமக்கள் பயணத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என உத்தரகண்ட் மாநிலத்தின் அமைச்சரவை மந்திரி சுபோத் யூனியால் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!