தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் – காவல்துறை எச்சரிக்கை!!
தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் தேவை இல்லாமல் வாகனங்களில் சுற்றி 2 முறை பிடிபட்டால் வாகனம் திருப்பித் தரப்படாது என சென்னை காவல்துறை எச்சரித்து உள்ளது.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முதல்வர் அவர்கள் 14 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்தார். இதன் படி தமிழகம் முழுவதும் 14 நாட்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் குறையாமல் மேலும் அதிகரித்து வந்தது. அதனால் அரசு மேலும் 7 நாட்களுக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கை நீடித்துள்ளது. இதன் படி தமிழகத்தில் மே 31 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய தகவல் – புத்தகங்கள் விநியோகம்!
இந்த ஊரடங்கு நாட்களில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் முழுவதும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று 9 மணி வரை கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்தது. இன்று முதல் தமிழகம் முழுவதும் கடும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. 320 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஊரடங்கினை கண்காணிக்கும் பணியில் 20,000 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே ஊரடங்கை மீறி வெளியே வருவோர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும், வாகனங்களில் சுற்றி 2 முறை பிடிபட்டால் வாகனம் திருப்பித் தரப்படாது என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றங்கள் மூலமே ஒப்படைக்கப்படும். சிறிய சாலைகள், மேம்பாலங்கள் மூடப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.