25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து – கிழக்கு ரயில்வே அறிவிப்பு!!
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மாண்டலம் யாஸ் புயலாக மாறியுள்ளது. அதனால் 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள் ரத்து:
நாடு முழுவதும் வெப்பச்சலனம் காரணமாக பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் அரபிக்கடல் பகுதிகளில் உருவான டவ்தே புயல் காரணமாக குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து பெரும் சேதாரங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக மாறியுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய தகவல் – புத்தகங்கள் விநியோகம்!
இந்த புயல் ஒடிசாவில் உள்ள பராதீப்பில் 540 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருமாறும். மேலும் மே 26ம் தேதி அன்று மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் சேதாரங்கள் ஏற்படும் என்பதால் 25 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
நியூ தின்சுகியா – தாம்பரம் சிறப்பு ரயில் மே 24 ஆம் தேதி முதல், தாம்பரம் – நியூ தின்சுகியா சிறப்பு ரயில் மே 27 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளது. ஐசிதி – தாம்பரம் சிறப்பு ரயில் மே 26 முதல், தாம்பரம் – ஐசிதி ரயில் மே 29 முதல் மற்றும் சென்னை சென்ட்ரல் – நியூ ஜல்பைகுரி – சென்னை ரயில் மே 28 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளது.