தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய தகவல் – புத்தகங்கள் விநியோகம்!
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில், 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் அடுத்த கல்வியாண்டிற்கான பாட புத்தகங்கள் விரைவில் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
புத்தகங்கள் விநியோகம்:
கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பேரலை காரணமாக மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், மாற்று வகையில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரக்கூடிய சூழலில் 9 முதல் 12 வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக கொரோனா 2 ஆம் அலை தாக்கம் துவங்க ஆரம்பித்தது.
மே 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
இதன் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளும், தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. +2 மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகம், கடந்த ஜனவரி மாதம் முதல் வரும் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பாட புத்தகங்களை அச்சிடும் பணிகளை துவங்கியது. இது குறித்து தமிழக பாடநூல் கழக அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியிலும் சரியான திட்டமிடுதல் மூலம் பாடப் புத்தகங்களை அச்சிடும் பணிகள் முடிந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான, 2.8 கோடி இலவச புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் தனியார் பள்ளிகளுக்கான விற்பனை புத்தகங்களும் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் முழு ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும், பாடப் புத்தகங்கள் பிரித்து அனுப்பப்படும். தவிர தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்களும், மண்டல வாரியாக உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் பள்ளிகள் மீண்டும் திறந்தவுடன், அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என தெரிவித்துள்ளனர்.