இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பு – பிரதமர் எச்சரிக்கை!
இந்தியாவில் கொரோனா குறித்து பிரதமர் கூறியுள்ள அறிக்கையால், மக்கள் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வரும் என்ற எண்ணத்தில் தவித்து வருகின்றனர்.
முழு ஊரடங்கு:
உலகில் உள்ள நாடுகள் அனைத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த தொற்று பிறந்த நாடு சீனாவில் உள்ள வூகான் பகுதியில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் பரவியது. மேலும் நமது நாடான இந்தியாவிலும் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பாக மக்களை வைத்து வந்தனர். இந்நிலையில் அடுத்தாக ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஒமைக்ரான் தொற்றின் திரிபான XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது அதி வேகமாக பரவக் கூடியது என்றும் கூறியுள்ளனர். மேலும், மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த முதியவர் ஒருவருக்கு இந்த புது வகை வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) 144 தடை உத்தரவு – ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!
அதனை தொடர்ந்து, குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோயில் நிறுவன தினத்தையொட்டி இன்று விழா நடத்தப் பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி கொரோனா ஊரடங்கு குறித்த தகவலை தெரிவித்து உள்ளார். அது என்னவென்றால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 85 கோடி டோஸ் தடுப்பூசிகள் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளன. உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சாதனை பொதுமக்களின் ஆதரவால் சாத்தியம் ஆகியுள்ளது.
அதனை தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலில் இருந்த நடவடிக்கைகள் அனைத்தும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கொரோனா நெருக்கடி முடிந்துவிட்டது என்று நாங்கள் கூறவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், பொதுமக்கள் கொரோனா குறித்த பிரதமரின் இந்த எச்சரிக்கையால், நாட்டில் எந்த நேரமும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்