நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!

0
நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!

உலகில் பல்வேறு நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் சமயத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

முழு ஊரடங்கு:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று முதன் முதலில் சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு எதிராக பல்வேறு வகையான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட இந்த வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸை விட வீரியம் மிக்கதாக பரவி வருகிறது. அத்துடன் தற்போது ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த “எக்ஸ்இ” வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புதிய வைரஸ் ஓமைக்ரான் வைரஸை விட 2 மடங்கு வேகமாக பரவும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டங்களில் திருத்தம்?

மேலும் இந்தியாவில் ஜூன் மாதத்தில் 4ம் அலை பரவ தொடங்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் அண்டை நாடான சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாட்டில் பல நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் நெதர்லாந்து நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை குளிர் காலமாக இருக்கும். அதனால் இந்த குளிர் காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1 கோடியாக இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் சமயத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் பொதுமக்கள் கொரோனா மேலும் பரவாமல் இருக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!