தமிழகத்தில் அமலாகும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!
தமிழகத்தில் பழையபடி கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார். மேலும், கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்தது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து வசதிகளும் நிறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. இதனால் பழையபடி மக்கள் பொது இடங்களில் நடமாட துவங்கினர். இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. மீண்டும் பொது இடங்களில் மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
சென்னையில் உள்ள ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,080 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்தியாவில் 1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தவில்லை. இதனால் கொரோனா தடுப்பூசியை செலுத்தாதவர்கள் கண்டிப்பாக செலுத்தும்படி சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.